search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி முதல்வர்"

    • லட்சுமப்பா கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.
    • அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் கமலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமப்பா (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    லட்சுமப்பா கடந்த மாதம் 29-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.

    பின்னர் அவரது குடும்பத்தினர் லட்சுமப்பாவை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். லட்சுமப்பா கடந்த 20 நாட்களுக்கு மேலாக திருப்பதியில் அனாதையாக சுற்றித்திரிந்தார்.

    குடும்பத்தினர் தன்னை அனாதையாக விட்டுச் சென்றதை எண்ணி விரக்தி அடைந்தார்.

    இதனால் பாபவிநாச அணைக்கு சென்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் அவரது உடலை மீட்டனர். அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் இன்று காலை திருப்பதிக்கு வந்தனர். லட்சுமப்பாவை திருப்பதியில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    கமலாபுரத்திற்கு வந்து இருப்பார் என எண்ணி நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். நாங்கள் அவரை அனாதையாக விட்டு வரவில்லை என போலீசாரிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்றார்.
    • 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். அவர் முதல் முறையாக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இதற்கு முன்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வந்துள்ளார்.

    மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று சிவகங்கை மாவட்ட கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர www.tnhealth.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் வழங்கி கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா கூறுகையில், கடந்தாண்டு அரசு ஒதுக்கிடு 750 விண்ணப்பங்கள். 250 நிர்வாக விண்ணப்பங்களை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன.

    இந்தாண்டு 1600 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு 1100-ம், நிர்வாக ஒதுக்கீட்டில் 500-ம் வந்துள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக வேலை நேரங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் வங்கி காசோலை பெற மருத்துவ கல்லூரி வளாகத்தில் வங்கியின் சிறப்பு தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
    ×